அடுத்த மாதம் 9ஆம் தேதி பகுதி சூரிய கிரகணத்தை சிங்கப்பூரர்கள் காணலாம். மிக அரிதான நிகழ்வாகக் கூறப்படும் இந்தக் கிரகணத்தில் உச்சநிலையின்போது கிட்டத் தட்ட 90% விழுக்காட்டுச் சூரியனைச் சந்திரன் மறைக்கும் என்று சிங்கப்பூர் அறிவியல் நிலையம் தெரிவித்துள்ளது. அந்த நாளில் காலை 7.22க்குச் சூரியன் உதயமாகும் என்றும் அதையடுத்துப் பத்து நிமிடங்களில் சூரிய கிரகணம் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. காலை 8.23 மணிக்கு உச்சநிலையை எட்டும் கிரகணம் காலை 9.33 மணியுடன் முடிந்துபோகும்.
கிரகணம் உச்சநிலையை எட்டும்போது வானம் மாலைப் பொழுதைப் போல காட்சி தரும் என்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் இயற்பியல் விரிவுரையாளராகப் பணியாற்றும் டாக்டர் ஏபெல் யாங் கூறியதாக 'டுடே' தெரிவித்தது.