ஐஸ்வர்யா சுப்பிரமணியன்
மொழி நிலைத்திருக்க கல்வெட்டுகளில் செதுக்கிய காலம் மாறி எதிர்காலச் சந்ததியினரும் தற்போதைய மொழி நடையைப் பற்றி அறிந்துகொள்ள வாய்ப்பளிக் கிறது புதிய முயற்சி ஒன்று. சிங்கப்பூரில் பொது இடங்களில் தமிழில் இடம்பெற்றுள்ள அறிவிப்புகள், வழிகாட்டிகள் போன்றவற்றைப் புகைப்படம் எடுத்துச் சேகரித்துள்ளது 10 பேர் உள்ளடக்கிய குழு. கடந்த ஆண்டு முழுவதும் கிட்டத்தட்ட 500 பதிவுகள் 'சிங்கப்பூர் தமிழ் 2015' என்ற முயற்சியின்கீழ் சேகரிக்கப்பட்டுள்ளன.
சிங்கப்பூரில் தமிழ்மொழியின் பயன்பாட்டைப் பொதுப் பதி வேட்டில் ஆவணப்படுத்துகிறது சிங்கப்பூர் மின் மரபுடைமைக் குழுவின் இந்த முயற்சி. "இந்தப் பணிக்கு 2015ஆம் ஆண்டு வெறும் தொடக்கப்புள்ளி தான். ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் ஒரு முறை தொடரவிருக்கும் நெடுங்காலத் திட்டம் இது. இதன் வழியாக, காலப்போக்கில் சிங்கப்பூரில் தமிழ் எவ்வாறு பரிணமித்துள்ளது என்பது புலப்படும்" என்றார் இத்திட்டத்தின் ஆலோசகர், திரு அருண்மகிழ்நன்.
சிங்கப்பூரின் பொது இடங்களில் தற்போது புழக்கத்தில் இருக்கும் தமிழ் அறிவிப்புகள், வழிகாட்டிகள், இடங்களின் பெயர்கள் போன்றவற்றை ஆவணப்படுத்த கைகோத்திருக்கும் குழுவினர். படம்: திமத்தி டேவிட்