திருவனந்தபுரம்: கேரள மாநில மதுப்பிரியர்கள் அம்மாநில அர சுக்கு எதிராகக் குரல் கொடுக்கத் தயாராகி வருகின்றனர். அடுத்து வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர். கேரளாவில் முழு மதுவிலக்கை அமல்படுத்துவதில் அம்மாநில அரசு முனைப்பாக உள்ளது. இதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. முதற் கட்டமாக மதுவிடுதிகளை மூடிய கேரள அரசு, அடுத்தகட்டமாக மதுக்கடைகளையும் படிப்படியாக மூடி வருகிறது.
இதன் காரணமாக மது அருந்துவோர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய கேரள மது அருந்துவோர் பாது காப்பு அமைப்பின் ஒருங்கிணைப் பாளர் எம்.தாமோதரன், மதுக்கடைகளின் எண்ணிக் கையை குறைத்துவிட்டதால் மது குடிப்போர் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளதாகக் கூறினார். "மது விற்பனையால் கேரள அரசுக்கு ரூ.10 ஆயிரம் கோடி அளவு வருவாய் கிடைக்கிறது. ஆனால், மது அருந்துபவர்களைக் குற்றவாளிகளைப் போல் நடத்துகிறது அரசு. "கேரள அரசின் வருவாயில் 60 விழுக்காடு மது விற்பனையால் வருகிறது. ஒவ்வொரு மதுப் புட்டிக்கும் 250 விழுக்காடு வரியை அரசு விதிக்கிறது. ஆனால், பெரும்பாலான மதுக் கடைகள் இருட்டான, பாழடைந்த நிலையில் சுகாதாரமற்று காணப் படுகின்றன," என்றார் தாமோ தரன்.