மும்பை: இருமுறை தோல்வி கண்ட பிறகே மும்பை தாக்குதல் நடத்தப்பட்டது என லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி டேவிட் ஹெட்லி கூறியுள்ளான். ராணுவ ஆராய்ச்சியாளர்களை கொல்வதற்காகவே மும்பை தாக்கு தல் திட்டமிடப்பட்டது என்றும் மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்த அவன் அதிர்ச்சி தகவலை வெளியிட்டான். 2008ஆம் ஆண்டு மும்பையில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதலில் 166 அப்பாவி மக்கள் கொல்லப் பட்டனர்.
தாக்குதலுக்கு இலக்கான இடங்களைப் பற்றிய விவரங்களை உளவறிந்து தீவிரவாதிகளுக்கு தகவல் கொடுத்ததற்காக டேவிட் ஹெட்லி கைதானான். தற்போது அமெரிக்காவில் சிறைவாசம் அனு பவித்து வரும் ஹெட்லி, நேற்று முன்தினம் காணொளி வசதி மூலம் வாக்குமூலம் அளித்தான்.