நைப்பிடா: மியன்மாரில் ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டனர் என்று அந்நாட் டின் அதிகாரிகள் தெரிவித்தனர். தலைநகர் நைப்பிடாவில் நிகந்த விபத்தில் ஆகாயப் படைக்கு சொந்தமான விமானம் மேலே ஏறிய சிறிது நேரத்தில் விழுந்து நொறுங்கியது. அந்த விமானத்தில் இருந்த ஐந்து பேரும் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுப்பட்டபோது விபத்து ஏற்பட்டது. விவசாய நிலத்தில் விழுந்த இடத்தில் ஏராளமானவர்கள் கூடினர். விமானச் சிதைவுகள் எரிந்து கொண்டிருந்ததை தீ அணைப்பாளர்கள் அணைத்தனர்.
"நான்கு பேர் மாண்டுவிட்டனர். ஒருவர் உயிருடன் இருக்கிறார்," என்று பெயர் தெரிவிக்க விரும்பாத மூத்த போலிஸ் அதிகாரி ஒருவர் சொன்னார். இதற்கிடையே இந்தோனீ சியாவின் ராணுவ விமானம் ஒன்றும் நேற்று விபத்துக்குள் ளானது. சோதனை ஓட்டத்தில் கிழக்கு ஜாவாவில் மக்கள் நிறைந்த இடத்தில் விமானம் விழுந்தது என்று இந்தோனீசிய விமானப் படை அதிகாரிகள் குறிப்பிட்டனர். இந்த விபத்தில் உயிர்ச் சேதம் பற்றி உடனடியாகத் தெரியவில்லை. அதில் ஒரு விமானியும் ஒரு பொறியாளரும் இருந்ததாகக் கூறப்படுகிறது.
மியன்மாரில் விபத்துக்குள்ளான ராணுவ விமானத்தின் சிதைவுகளை அதிகாரிகள் பார்வையிடுகின்றனர். இந்த விபத்தில் நால்வர் கொல்லப்பட்டதாகவும் ஒருவர் உயிர் தப்பியதாகவும் கூறப்படுகிறது. விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. படம்: ஏஎஃப்பி