சாங்கி கடற்கரைப் பகுதியில் போர்க்கால வெடிகுண்டு எனச் சந்தேகிக்கப்படும் எறிபடை ஒன்று கடந்த செவ்வாய்க்கிழமை இரவு கண்டுபிடிக்கப் பட்டு பாதுகாப்பான முறையில் செயலிழக்கச் செய்யப்பட்டதாக சிங்கப்பூர் ஆயுதப் படையின் 'ஃபேஸ்புக்' பதிவு தெரிவிக் கிறது. இந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாவது போர்க்கால எச்சம் இது. 105 மிமீ. அளவிலான பிரிட்டிஷ் எறிபடை ஒன்று செங்காங்கில் கடந்த மாதம் 22ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. "சிங்கப்பூரர்கள் சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டங் களில் மூழ்கியிருந்த வேளை யில், சாங்கி கடற்கரைப் பகுதியில் உள்ள கட்டுமானத் தளம் ஒன்றில் போர்க்கால எச்சம் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, நமது சிங்கப்பூர் ஆயுதப்படை வெடிக்கும் போர்த் தளவாடங்களை அகற்றும் குழு செயலில் இறங்கியது," என்று சிங்கப்பூர் ஆயுதப் படை தமது 'ஃபேஸ்புக்' பக்கத்தில் பதிவேற்றி இருந்தது.
போர்க்கால எச்சமெனச் சந்தேகிக்கப்படும் எறிபடை ஒன்றை செயலிழக்க வைக்கும் பணியில் சிங்கப்பூர் ஆயுதப் படை வீரர். படம்: சிங்கப்பூர் ராணுவத்தின் 'ஃபேஸ்புக்' பக்கம்