லண்டன்: திடலில் மோசமாக நடந்துகொள்ளும் வீரர்களை பச்சை, மஞ்சள், சிவப்பு நிற அட்டை காட்டி நடுவர் எச்சரிப்பதைக் காற்பந்து, ஹாக்கி போட்டிகளில் கண்டு இருக்கலாம். இந்த நிலையில், 'ஜென்டில் மேன்' விளையாட்டு என அறியப்படும் கிரிக்கெட்டிலும் எதிரணி வீரர்களை வசை பாடுவதும் மோசமாக நடந்து கொள்வதும் அதிகரித்து வருகிறது.
அதைத் தடுக்கும்விதமாக, வீரர்களை எச்சரிக்கும் வகையில் கிரிக்கெட்டிலும் சிவப்பு அட்டை முறையைப் பரிசோதிக்க இருக்கிறது 'எம்சிசி' என அழைக்கப்படும் இங்கிலாந்தின் பிரபலமான மேரில்போன் கிரிக்கெட் மன்றம். புதிய முறைப்படி, நடுவரை மிரட்டுதல், எதிரணி வீரரைத் தாக்குதல் என வன்முறையைக் கையாளும் வீரர் ஒருவர் திடலைவிட்டு வெளியேற்றப் படுவார். கடந்த ஆண்டில் மட்டும் இங்கிலாந்தில் ஐந்து கிரிக்கெட் போட்டிகள் வன்முறை காரணமாகக் கைவிடப்பட்டன.
காரசாரமான விவாதத்தில் டேவிட் வார்னர், ரோகித் சர்மா. படம்: ராய்ட்டர்ஸ்