பாஜு: தென்கொரியாவின் எண்ணற்ற நிறுவனங் களின் முதலாளிகள் வடகொரியாவிலிருந்து கொரிய எல்லை யைக் கடந்து தென்கொரியாவை நோக்கித் திரும்பியுள்ளனர். சென்ற மாதத்தின் அணுவாயுதச் சோதனைக்குப் பிறகு சென்ற வாரம் வடகொரியா ஈடுபட்ட தொலைதூர ஏவுகணைச் சோதனையை அடுத்து அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டதால், பத்தாண்டுகளுக்கும் மேலாக செய்யப்பட்ட முதலீடுகள், நிறுவனங்களை விட்டு விட்டுத் திரும்ப வேண்டிய நிலை தொழிலதிபர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வடகொரியாவில் இருக்கும் கேசோங் தொழிற் பேட்டை வளாகம் மூடப்பட்டதில் 53,000 வட கொரிய ஊழியர்கள் நேற்று பணிக்கு வரவில்லை. அந்த வளாகத்தில் ஒரு பொறியியல் நிறுவனத்தின் மேலாளர் ஜாங் இக்=ஹோ, "என்ன சொல்வதென்றே தெரிய வில்லை. நிறுவனங்கள் சிறப்பாக இயங்க கடும் உழைப்பைப் போட்டிருக்கிறோம். என்ன நியாயம் இது?," என்று கூறினார்.
வட, தென் கொரிய நாடுகள் சேர்ந்து நடத்திய, 2004ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட அந்தத் தொழிற்பேட்டை வளாகத்தில் இயங்கிய 124 நிறுவனங்களும் தற்போது மூடப்பட்டுள்ளன. இது குறித்து வடகொரியா இதுவரை எதுவும் கூறவில்லை. தனது குடிமக்கள் அனைவரும் எல்லையைக் கடப்பதற்கு அனு மதியளிக்குமாறு கோரிக்கை விடுத்தபோதிலும் பியோங்யாங் சிலரைத் தடுப்புக் காவலில் வைக்குமோ என்று சோல் சந்தேகிக்கிறது. அந்நிறுவனங்கள் மூலம் வடகொரியா ஈட்டிய தொகையின் பெரும் பகுதி கிம் ஜோங் உன்னின் உள்வட்டத்துக்கும் அந்நாட்டின் அணுவாயுதத் திட்டங்களுக்கும் போனது.
சென்ற வாரம் வடகொரியா தொலைதூர ஏவுகணைச் சோதனை மேற்கொண்டது. அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டதை அடுத்து கேசோங் தொழிற்பேட்டை மூடப்பட்டது. சோதனைச் சாவடியில் வாகனம் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. படம்: ஏஎஃப்பி