ஹாங்காங்: ஹாங்காங்கில் சென்ற செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட கலவரம் தொடர்பில் கைதானவர்களில் 37 பேர் மீது நேற்று கவ்லூன் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. ஹாங்காகின் உள்நாட்டுப் பேச்சாளர் எட்வர்ட் லியுங், மாணவர் பத்திரிகையாளர் ஸ்டீஃபென் கூ ஆகியோர் குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் முக்கியமானவர்கள். ஏப்ரல் 7ஆம் தேதி வழக்கை ஒத்தி வைக்குமாறு லியுங் கோரினார். ஒருவரைத் தவிர குற்றம் சாட்டப்பட்ட அனைவரது வழக்கும் அதே நாளுக்கு ஒத்தி வைக்கப்பட்டது. கலவரத்தில் ஈடுபட்டதாக அனைவர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டதுடன் அவர்கள் தடை உத்தரவையும் எதிர்நோக்குகின்றனர்.
21 வயதாகும் ஹோ சியூ சியுங் நீதிமன்றத்தின் முன்பு முதலில் முன்னிலைப்படுத்தப்பட்டார். பிப்ரவரி 8, 9 தேதிகளில் கலவரம் செய்த குற்றம் அவர் மீது சுமத்தப்பட்டது. ஃபை யுயென் ஸ்த்ரீட், டன்டாஸ் ஸ்த்ரீட், ஷாங்காய் ஸ்த்ரீட் ஆகிய பகுதிகளுக்குச் செல்ல அவருக்குத் தடை விதிக்கப்பட்டது. மோங் கோக் பகுதியில் சில்லறைப் பொருட்கள் விற்கும் தற்காலிகக் கடைகள் நடத்திய கடைக்காரர்களுக்கு ஆதரவாக ஆத்திரத்தில் அங்கே சேர்ந்த கூட்டத்தை விலக்க கலகத் தடுப்பு போலிசார் வான் நோக்கி இரண்டு முறை சுட்டதில் அந்தக் கலவரம் வெடித்தது.