சென்னை: வரும் சட்டமன்றத் தேர்தலில் சீமானின் 'நாம் தமிழர்' கட்சி 234 வேட்பாளர்களைக் களமிறக்கவுள்ளது. அதற்கான வேட்பாளர் அறி முகக் கூட்டம் கடலூரில் இன்று மாலை நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் சீமான் அறிவித்துள்ளார். இந்தத் தேர்தலில் 'நாம் தமிழர்' கட்சி எந்தக் கட்சியுடனும் கூட்டு வைத்துக்கொள்ளாமல் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான், "தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கப்பட்ட 'நாம் தமிழர்' கட்சி அதற்கான பாதையில் செவ்வனே செல்கிறது. "'நாம் தமிழர்' கட்சியால் மட்டுமே தமிழகத்தில் நல்ல மாற்றத்தைக் கொண்டு வரமுடியும்.
"எங்கள் திருநாட்டில் எங்கள் நல் ஆட்சியே, தலைநகரை மாற்றுவோம், தமிழகத்தையே மாற்றுவோம் என்கிற முழக்கங்களுடன் தேர்தலைச் சந்திக்க உள்ளோம். "மாற்றம் வரும், நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்துவோம். தமிழர்கள் அதிகம் வசிக்கும் கேரள மாநிலத்தின் மூணாறு சட்டமன்றத் தொகுதியிலும் நாம் தமிழர் கட்சி போட்டியிடுகிறது," என்று கூறினார்.
'நாம் தமிழர்' கட்சி சீமான். படம்: ஊடகம்