சென்னை: நல்ல உள்ளம் கொண்ட ஆட்டோ ஓட்டுநர் ரவிச்சந்திரன் நேற்று சென்னையில் கௌரவிக்கப்பட்டார். சில மாதங்களுக்கு முன் தனது ஆட்டோ ரிக்ஷாவில் பயணம் செய்த பயணி ஒருவர் நெஞ்சுவலியால் துடித்தார். இதையறிந்த ரவிச்சந்திரன், அந்தப் பயணியைப் பத்திரமாக சரியான நேரத்தில் அருகேயுள்ள ஒரு மருத்துவமனையில் சேர்த்து அவருக்கு சிகிச்சையளிக்கச் செய்து காப்பாற்றினார். மருத்துவமனையில் தந்தை சேர்க்கப்பட்டிருக்கும் செய்தி யறிந்த பயணியின் மகன் கோல் கத்தாவில் இருந்து விமானம் மூலம் சென்னையில் உள்ள மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தார்.
அவரது தந்தையின் மருத்துவக் கட்டணமான 47,000 ரூபாயைச் செலுத்துவதற்குப் போதுமான பணம் அவரிடம் இல்லை. விமானக் கட்டணத்திற்குச் செலவு செய்ததுபோக அவரிடம் 15,000 ரூபாய் மட்டுமே கையில் இருந்தது. இதையறிந்த ஆட்டோ ஓட்டுநர் ரவிச்சந்திரன் தன்னிடம் இருந்த ஒரே சொத்தான அவரது ஆட்டோ ரிக்ஷாவை அடகு வைத்து பணம் பெற்று, பயணி யின் மருத்துவமனைக் கட்டணத்தைச் செலுத்தியதாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்தார். இந்தச் செய்தியறிந்த அண்ணா ஆட்டோ நல அறக்கட்டளை திரு ரவிச்சந்திரனின் மனிதாபிமானத்தையும் தைரியத்தையும் பாராட்டிக் கௌரவித்தது.
ஆட்டோ ஓட்டுநர் ரவிச்சந்திரன். படம்: ஊடகம்