பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர்களுக்கும் அடுத்த ஆண்டு முதல் 'எடுசேவ் மெரிட் பர்சரி', 'எடுசேவ் குட் புரோகிரஸ்' ஆகிய 'எடுசேவ்' விருதுகள் வழங்கப்படவுள்ளன. இதன் மூலம் ஆண்டுதோறும் 15,000 மாணவர்கள் பயன்பெறுவர். அத்துடன், ஏட்டுக் கல்வி தவிர திட்டப்பணிகள், கருத்தரங்குகள், போட்டிகள் போன்ற வற்றில் பங்கெடுத்துச் சாதிக்கும் பலதுறைத் தொழிற்கல்லூரி, தொழில்நுட்ப கல்விக் கழக மாணவர்களுக்காக 'எடுசேவ் ஸ்கில்ஸ்' விருதையும் அடுத்த ஆண்டிலிருந்து கல்வி அமைச்சு அறிமுகம் செய்யவிருக்கிறது. இந்தப் புதிய விருதின் மூலம் 3,500 மாணவர்கள் ஆண்டுதோறும் பயனடைவர். இவற்றால் கல்வி அமைச்சு ஆண்டுக்கு ஒன்பது மில்லியன் வெள்ளியைக் கூடுதலாகச் செலவிட வேண்டி யிருக்கும்.
யீஷூனில் இருக்கும் நார்த் வியூ தொடக்கப்பள்ளியில் 'எடுசேவ்' விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தற்காலிக கல்வி அமைச்சர் (உயர்கல்வி, திறன்கள்) ஓங் யி காங், "பலதுறைத் தொழிற்கல் லூரி மாணவர்களும் கடினமாக உழைத்து நல்ல மதிப்பெண்கள் பெற்று மேம்பாடு கண்டுள்ளனர். அவர்களும் அங்கீகரிக்கப்பட வேண்டும்," என்று கூறினார். இதற்கு முன்பு இந்த விருதுகள் தொடக்கப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி, தொடக்கக் கல்லூரி, தொழில்நுட்ப கல்விக் கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தன.