மெக்சிகோ நகரம்: போதைப் பொருள் கடத்தல் மன்னன் 'எல் சாப்போ' குஸ்மான் மீண்டும் சிக்கியிருக்கிறான். ஹோட்டலில் பதுங்கியிருந்த அவனை கடற்படை அதிகாரிகள் சுற்றி வளைத்து கைது செய்தனர். "குஸ்மான் கைது செய்யப் பட்டான்," என்று மெக்சிகோ அதிபர் என்ரிக் பெனா நியடோ அறிவித்தார். "அவனைப் பிடிப்பதற்காக தீட்டப்பட்ட செயல்திட்டம் வெற்றி கரமாக நிறைவேறியது," என்றும் அவர் சொன்னார்.
சினாலாவோ மாநிலத்தில் உள்ள லாஸ் மோச்சிஸ் நகரில் ஒரு ஹோட்டலில் குஸ்மான் தங்கியிருந்தான் என்று தெரி விக்கப்பட்டது. மெக்சிகோ நாட்டின் கடற் படை வீரர்கள், 58 வயது குஸ் மானுக்கு பல மாதமாக வலை வீசித் தேடி வந்தனர். கடந்த ஜூலை 11ஆம் தேதி உயர்மட்ட பாதுகாப்பு கொண்ட சிறையிலிருந்து குஸ்மான் தப் பியதால் அதிகாரிகளுக்கு பெருத்த அவமானம் ஏற்பட்டது.