எண்ணெய் விலைச் சரிவைப் பயன்படுத்தி புதிய தொழில்நுட்பங் களில் முதலீடு செய்வதில் விமானத் துறை கவனம் செலுத்த வேண்டும் என துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்னம் தெரிவித்து உள்ளார். சிங்கப்பூர் விமானக் காட்சி விமானத்துறை தலைமைத் துவ உச்சநிலைக் கூட்டத்தில் பேசிய அவர், சிங்கப்பூரின் வருங் காலப் பொருளியலில் விமானத் துறைக்கு இருக்கும் முக்கியத் துவம் குறித்தும் விளக்கினார்.
நாளை தொடங்கவிருக்கும் 'சிங்கப்பூர் விமானக் காட்சி 2016'ல் சிங்கப்பூர், தென் கொரியா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளின் போர் விமானங்களைக் காணலாம். நாளை முதல் 19ஆம் தேதி வரை வர்த்தக நிபுணர் களுக்காகவும் வருகிற சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்கள் பொதுமக்களுக்காகவும் விமானக் காட்சி நடைபெறும். பொதுமக்களுக்கான காட்சி யின்போது சிங்கப்பூர் குடியரசு ஆகாயப் படையின் F=15SG போர் விமானமும் AH=64D தாக்குதல் ஹெலிகாப்டரும் 11 விதமான சாக சங்களை நிகழ்த்தும். விமானங்கள் வானில் நிகழ்த் தும் சாகசங்களின் முன்னோட்டக் காட்சி நேற்று சாங்கி கண்காட்சி மையத்தில் நிகழ்த்தப்பட்டது. குறிப் பாக நேர்குத்து தந்திரம் எனப்படும் புதிய வகை சாகசமும் இடம்பெறும்.
கொரிய ஆகாயப் படையின் பிளாக் ஈகிள் விமான வித்தைக் குழு கடந்த 2014ஆம் ஆண்டு முதல் புதிதாக மூன்றுவித சாகசங்களை இணைத்துள்ளது. அதேபோல, அமெரிக்க ஆகாயப் படை தனது போர் விமானங்கள், குண்டு வீசும் விமானங்கள் ஆகியவற்றின் வரிசையோடு சரக்கு விமானங்களையும் காட்சி யில் ஈடுபடுத்தும். அதன் போர் விமானங்களில் பிரசித்தி பெற்ற F=16C/D 'ஃபைட் டிங் ஃபால்கன்' போர் சுற்று எல்லைகளுக்குள் வளைந்து வளைந்து சென்று தாக்குவதைப் போன்ற சாகசத் திறன்களைக் காட்டும்.
தென் கொரிய ஆகாயப் படையின் பிளாக் ஈகிள் விமானக் குழுவின் சாகசங்களுள் ஒன்று. படம்: ராய்ட்டர்ஸ்