அன்பர் (காதலர்) தினம் நேற்று உலகெங்கிலும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. பிரபல நடிகைகள் காதல் குறித்து என்ன நினைக்கிறார்கள் எனத் தெரிந்துகொள்வோமா? "காதல் என்பது நம்பிக்கை, புரிந்து கொள்ளுதல், பாசம், சின்ன மரியாதை, மதிப்பு இதெல்லாம் சேர்ந்தது. உணவகம் சென்று சாப்பிடுவதும் பிடித்தமானவர்களை வெளியில் அழைத்துப்போவதும் ரோஜாக்கள் வாங்கித் தருவதும் காதலின் முதல்படிதான். ஆனால் உண்மையான காதல் என்பது எத்தனை ஆண்டுகள் ஆனாலும் கூடவே இருக்கவேண்டும்," என்கிறார் பாவனா.
"எல்லாருக்கும் காதல் அவசியமான ஒன்று. அது ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் மட்டும் இருக்கவேண்டும் என்பதில்லை. குடும்பத்தில் எல்லோரிடமும் காதல் இருக்கலாம். "முதலில் நம்மை நாம் நேசிக்கணும். நாம் பார்க்கும் வேலையை நேசிக்க வேண்டும். நான் என் சினிமா வேலையை ரொம்பவே ரசிக்கிறேன். அதனால்தான் வெற்றியைத் தரமுடிகிறது. முதலில் நம்மை நாமே காதலிக்க வேண்டும் என்பதே என் வேண்டுகோள்," என்கிறார் ஸ்ரீ திவ்யா. "காதல் ஒரு இனிமையான வலி," என்பது பிந்து மாதவியின் கருத்து. அது ஒவ்வொருவரின் உணர்ச்சிகளைச் சார்ந்தது என்றும் கூறுகிறார். "ஒருவரை இழக்கும்போதும் ஒருவரைப் பிரியும் போதும் காதல் வலியைக் கண்டிப்பாக வார்த்தைக்குள் அடக்கி விடமுடியாது. அன்பு செலுத்து வோம், அன்பை பெறுவோம்," என்கிறார் பிந்து மாதவி.