தேர்தல் செலவு கணக்கைத் தாக் கல் செய்யாத 42 வேட்பாளர்கள் 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டி யிடத் தடை விதித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லகானி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக அந்த அதிகாரி நேற்று 'வாட்ஸ்அப்' செயலி மூலம் ஒரு தகவலை வெளியிட்டார். 2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தேர்தல் செலவு கணக்கைத் தாக்கல் செய் யாத 10 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடத் தகுதியற்றவர் களாகக் கருதி அவர்களுக்கு மூன்றாண்டுகள் தடை விதிக்கப் படுவதாக அந்தத் தகவலில் அவர் கூறியுள்ளார்.
இதேபோன்று, 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட 32 வேட்பாளர்கள் மூன்று ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடைவிதித்தும் அவர் உத்தரவு பிறப்பித்து உள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், தடை செய்யப் பட்ட வேட்பாளர்கள் யார், அவர் கள் எந்தெந்தக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் என்பது போன்ற விவரங்களை ராஜேஷ் லகானி தெரிவிக்கவில்லை.