புருஸ்ஸல்ஸ்: புருஸ்ஸல்ஸ் நகரில் பெல்ஜிய போலிசார் திடீர் சோதனைகளை நடத்தி ஐஎஸ்எஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்ததாகக் கூறப்படும் பத்து பேரை கைது செய்துள்ளனர். "எங்கள் விசாரணையில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் சேர பலர் சிரியா சென்றுவிட்டது தெரிய வருகிறது," என்று பெல்ஜிய போலிசார் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரி வித்தனர். கணினி, கைபேசி போன்ற மின்னியல் சாதனங்களும் கைப்பற்றப் பட்டதாக போலிசார் கூறினர்.
புருஸ்ஸல்ஸ்: புருஸ்ஸல்ஸ் நகரின் கிறிஸ்துமஸ் சந்தையில் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ள போலிசார். கோப்புப்படம்: ராய்ட்டர்ஸ்