ஜெர்மனியின் கொலோன் நகரில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்கள் மீது ஒரு கும்பல் நடத்திய பாலியல் வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நகரில் பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சனிக்கிழமை நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது கூட்டத்தினரைக் கலைக்க போலிசார் முயன்றபோது இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
போலிசார் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்களையும் பட்டாசு வெடிகளையும் வீசியதாகவும் பதிலுக்கு கூட்டத்தினர் மீது போலிசார் கண்ணீர் புகைக் குண்டுகளையும் பட்டாசு வெடிகளையும் வீசியதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர்.
அந்த மோதலில் மூன்று போலிஸ்காரர்களும் செய்தியாளர் ஒருவரும் காயம் அடைந்ததாகக் கூறப்பட்டது. அந்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் 15 பேரை போலிசார் கைது செய்துள்ளனர். படம்: ராய்ட்டர்ஸ்