மா.கா.பா.ஆனந்த் கதாநாயகனாக நடிக்கும் படம் 'நவரச திலகம்'. கதாநாயகியாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறார். இவர்களுடன் கருணாகரன், ஜெயபிரகாஷ், இளவரசு, பாவா லட்சுமணன், மீராகிருஷ்ணன், லட்சுமி, மகாதேவன் ஆகியோர் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குபவர் காம்ரன். "இது நகைச்சுவைக்கு முக்கியத்துவம் தரும் கதை. ம.கா.பா.ஆனந்த் நகைக்சுவை வேடத்தில் கலக்குகிறார். இசையமைப்பாளர் சித்தார்த் விபின் வித்தியாசமான நகைச்சுவை வேடத்தில் நடிக்கிறார்.
"படத்தின் கதையை தயாரிப்பாளர் சுதர்சன வெம்புட்டியிடம் சொல்ல முயற்சி செய்தபோது அவர் வெளிநாட்டில் இருந்தார். அதனால் அவரிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டுதான் இந்தக் கதையைச் சொன்னேன். சுமார் மூன்று மணி நேரம் சொன்ன கதையை தொலைபேசியிலேயே பொறுமை யாகக் கேட்டார். அவருக்கு கதை பிடித்துப் போனதால் உடனடியாக வேலைகளைத் தொடங்கிவிட்டோம். "குடும்ப உணர்வுகள், நகைச்சுவை, காதல் அனைத்தும் உள்ள படம் இது. வரும் 19ஆம் தேதி திரைகாண்கிறது. ம.கா.பா.ஆனந்த் திறமையான நிகழ்ச்சித் தொகுப்பாளர் மட்டுமல்ல, நல்ல நடிகரும் கூட. அவருக்கு சின்னத்திரை மட்டுமல்லாமல், தமிழ்த் திரையுலகிலும் சிறப்பான எதிர்காலம் உண்டு. "படத்துக்குப் பெரும் பலமாக அவரது நகைச்சுவை அமைந்துள்ளது. சிருஷ்டி டாங்கே தனது பங்களிப்பை நிறைவாகத் தந்திருக்கிறார். மொத்தத்தில் படம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது," என்கிறார் இயக்குநர் காம்ரன்.