வாஷிங்டன்: அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக தமிழகத்தின் ஸ்ரீ சீனிவாசன் நியமிக்கப்படும் வாய்ப்பு கிட்டி இருக்கிறது. இந்தியாவின் சண்டிகரில் பிறந்த ஸ்ரீ சீனிவாசனின், 48, பெற்றேர், 1960களில் அமெரிக் காவுக்குப் புலம்பெயர்ந்தனர். சீனிவாசனின் தாயார் சென்னையைச் சேர்ந்தவர். தந்தை திருநெல்வேலியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது. அமெரிக்காவிலேயே பட்டப் படிப்பை முடித்து கீழ்நீதி மன்றத்தில் தனது வாழ்க்கையைத் தெடங்கிய சீனிவாசன் இப் பேது அந்நாட்டின் இரண்டாவது பெரிய நீதிமன்றமான கொலம் பியா சர்க்யூட் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதியாக பணியாற்றி வருகிறார்.
இதன் மூலம் அந்தப் பதவிக்கு வந்த முதல் அமெரிக்க இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றார். சீனிவாசன், அமெரிக்க அதிபர் ஒபாமா நிர்வாகத்தில் முதன்மைத் துணை தலைமை வழக்கறிஞராகவும் (செலிசிட்டர் ஜெனரல்) பணியாற்றி திருமண சட்ட வழக்கை திறம்பட நடத்தி யவர் என பெயரெடுத்தவர். ஸ்ரீசீனிவாசன் நியமனத்தைத் தடுக்கும் குடியரசுக் கட்சியினரை அதிபர் ஒபாமா சாடினார். இத்தகைய நியமனத்தைச் சாத்தியமாக்கும் கடமை குடி யரசுக் கட்சியினருக்கும் உண்டு என்றார் அவர்.