திருப்பதி: திருமலைக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதால் ஆக்டோபஸ் கமோண்டோ படைகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் திருப்பதியில் உள்ள கபில தீர்த்தம் அருகே நேற்று முன்தினம் காலை பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் மோப்ப நாய் உதவியுடன் அங்கு தீவிர சோதனை மேற்கொண்டனர். அதில் வெடித்தது நாட்டு வெடிகுண்டுகள் எனத் தெரிய வந்தது. மேலும் அந்த நாட்டு வெடிகுண்டுகளை வீசியது யார் என்று காவல்துறையினர் கண்டுபிடித்து விசாரித்து வருகின்றனர்.