வில்சன் சைலஸ்
மந்தமான பொருளியல் நிலை, வேலை பாதுகாப்பு குறித்த அக்கறை, அபாயத்துக்குள்ளாவோர் மூத்தோருக்கான ஆதரவு ஆகிய மூன்று விவகாரங்கள் சிங்கப்பூரர்களின் கவனத்தை அதிகமாக ஈர்த்துள்ளன. வரவு செலவுத் திட்டம் குறித்து நேற்று முன்தினம் நடைபெற்ற கலந்துரையாடலில் இதைக் கூறிய 'ரீச்' அமைப்பின் தலைவர் திரு சேம் டான், சிங்கப்பூரர்களிடம் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பின் மூலம் இதைக் கண்டறிந்ததாகச் சொன்னார்.
நிதி அமைச்சு, 'ரீச்' ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்த வரவு செலவு திட்டக் கலந்துரையாடலிலும் இது தொடர்பான கருத்துகளைப் பங்கேற்பாளர்கள் முன்வைத்தனர். 'மக்களை மேம்படுத்துதல்', 'புத்தாக்கத்தின் வழி நிறுவனங்களை வளர்த்தல்', அபாயத்துக் குள்ளாகும் குழுக்களுக்கு உதவுதல்', 'ஒருங்கிணைந்த சமூகத்தை உருவாக்குதல்' ஆகிய நான்கு தலைப்புகளில் சுமார் 70 பேர் சிறு குழுக்களாக கலந்துரையாடினர்.
சுமார் 70 சிங்கப்பூரர்கள் நேற்று முன்தினம் நடைபெற்ற வரவுசெலவுத் திட்டக் கலந்துரையாடலில் உற்சாகமாகப் பங்கேற்றனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்