டெல்லியிலிருந்து ப. பாலசுப்பிரமணியம்
இந்தியாவுக்கும் ஆசியான் நாடுகளுக்கும் இடையிலான தொடர்புகளை வலுப்படுத்தும் நோக்கில் 8வது ஆண்டாக டெல்லி கலந்துரையாடல் நடைபெறுகிறது. அரசியல் தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள், ஆய்வாளர்கள், வர்த்தகப் பேராளர்கள் போன்றோர் கலந்துகொள்ளும் இந்த மூன்று நாள் கலந்துரையாடலில் இரு தரப்புக்கும் இடை யிலான அரசியல் பாதுகாப்பு, பொருளாதார, சமூக, காலாசார விவகாரங்கள் அலசி ஆராயப் படுகின்றன. 'ஆசியான் இந்திய உறவுகள்: ஒரு புதிய அத்தியாயம்' என்பது இவ்வாண்டு கலந்துரையாடலின் கருப் பொருள். கலந்துரையாடலில் தொடக்கமாகப் பேசிய இந்திய வெளியுறவு அமைச்சின் செயலாளர் (கிழக்கு) திரு அனில் வாத்வா, இந்தியாவிற்கும் ஆசியானுக்கும் இடையிலான நட்புறவு இந்தியாவின் வெளி யுறவுக் கொள்கைகளின் முக்கிய அம்சங்களில் ஒன்று என்று வலியுறுத்தினார்.