நியாயமான, அனைத்துத் தரப்பினரையும் உள்ள-டக்கிய பணியிடத்தை ஆதரிக்கும் திட்டத்தை 'டாஃபெப்' எனப்படும் நியாயமான, முற்போக்கான வேலை நடைமுறைக்கான முத்தரப்புக் குழு நேற்று அறிமுகம் செய்தது. பணியிடத்தில் தனி நபர்கள் மீது காட்டப்படக் கூடிய பாரபட்சத்தைச் சுட்டிக் காட்டுவதுடன் நியாயமான, அனைத்துத் தரப்பினரையும் உள்ள-டக்கிய பணியிடத்தை உருவாக்குவதற்கு ஊழியர்களை ஊக்கு விப்பதும் 'ஃபேர்@வொர்க் ப்ராமிஸ்' எனப்படும் அத்திட்டத்தின் நோக்கம். "பணி இடத்தில் பாரபட்சமான போக்குகளைக் குறைப்பதில் ஒவ்வோர் ஊழியருக்கும் முக்கிய பங்குண்டு," என்றது 'டாஃபெப்'.
'ஃபேர்@வொர்க்' இணையத்தளத்திற்குச் சென்று நியாயமான, அனைத்துத் தரப்பினரையும் உள்ள-டக்கிய பணியிடத்தை உருவாக்குவதற்கு எவ்வாறு ஆதரவளிப்பார்கள் என்று ஊழியர்கள் எழுதலாம். இதுவரை ஏழு பன்னாட்டு நிறுவனங்கள், சிறிய, நடுத்தர நிறுவனங்கள், மனிதவள அமைச்சு, தேசிய தொழிற்சங்க காங்கிரஸ், ஸ்டார்பக்ஸ், ஓசிபிசி வங்கி உள்ளிட்ட முத்தரப்பு பங்காளித்துவ நிறுவனங்கள் 'ஃபேர்@ வொர்க்' இணையத்தளத்தில் தங்கள் ஆதரவை அளித்து உள்ளனர். மேலும் அதிக முதலாளிகளை ஈர்க்கவும் விளம்பரங்கள், வீதி நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றின் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வை அதிகரிக்கவும் முயல் வதாக 'டாஃபெப்' தெரிவித்தது.