பெய்ஜிங்: சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் பகுதியில் சீனா ராணுவ பலத்தை அதிகரித்திருப்பது குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி சாடியுள்ள வேளையில் அங்கு ஆயுதங்களை நீண்டகாலமாக வைத்திருப்பதாக சீனா உறுதிப்படுத்தியுள்ளது. சீனாவில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியுடன் அணுக்கமான உறவு வைத்துள்ள 'குளோபல் டைம்ஸ்' செய்தித்தாள் இந்தத் தகவலை சீனாவின் தற்காப்பு அமைச்சர் உறுதிப்படுத்தியதாகக் குறிப்பிட்டது. இருந்தாலும் அங்கிருக்கும் ஆயுதங்கள் எப்படிப்பட்டவை என்பது குறித்த தகவல் ஏதும் அளிக்கவில்லை. தனது எல்லைக்குள் ஆயுதங்களை நிறுவித்தற்காப்பை மேம்படுத்த சீனாவுக்கு அதிகாரம் உள்ளதாக 'குளோபல் டைம்ஸி'ன் தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
தென்சீனக் கடற்பகுதியில் இருக்கும் பிரச்சினைக்குரிய ஊடி தீவில் தரையிலிருந்து மேலே பாயும் ஏவுகணைகளை சீனா நிறுத்தி வைத்திருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். அந்தப் பகுதியில் சீனா தனது படைபலத்தை அதிகரித்திருப்பது குறித்து அமெரிக்கா அக்கறை தெரிவித்துள்ளது. எட்டு ஏவுகணைகளுக்கான இரண்டு மின்தேக்கிகள், ஒரு ராடார் சாதன அமைப்பு ஆகியவை ஊடி தீவைச் சென்றடைந்துள்ளதாக இவ்வாரத் தொடக்கத்தில் 'ஃபாக்ஸ் நியூஸ்' தெரிவித்தது.