தாய்லாந்து விமான நிலையத்தில் நெரிசலால் பாதுகாப்பு ஆபத்து

பேங்காக்: பேங்காக்கின் சுவர்ணபூமி விமான நிலையத்தில் நெரிசல் அதிகமாக இருப்பது கடுமையான பாதுகாப்பு அச்சுறுத்தல் எனவும் அதனை விரைந்து விரிவுபடுத்துவது அவசியம் எனவும் அனைத்துலக விமானப் போக்குவரத்துக் கழகம் (ஐஏடிஏ) எச்சரித்திருப்பதாக நேசன் நாளிதழ் குறிப்பிட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் அமெரிக்காவின் மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாகம் தாய்லாந்து விமானப் போக்குவரத்தின் பாதுகாப்புத் தரக் குறியீட்டைக் குறைத்தது.

மேலும் விமான நிலையத்தின் சில இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ள பொருட்களின் தரம் குறைவாக இருப்பதால் விமானங்கள் அவ்விடங்களில் சிக்கி நின்றுவிடுவதாகவும் ஐஏடிஏவின் தலைமை நிர்வாக அதிகாரி கூறியுள்ளார். ஓடுபாதையின் தரத்தை மேம்படுத்தவும் விமான நிலையத்தை விரிவுபடுத்துவதற்குமான பல நடவடிக்கைகள் தயாராக இருப்பதாகவும் அரசின் ஒப்புதலுக்காக அவை காத்திருப்பதாகவும் தாய்லாந்து விமானப் போக்குவரத்து நிறுவனம் தெரிவித்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!