தைப்பே: நிலநடுக்கத்தால் 16 மாடிக் கட்டடம் சரிந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதை அடுத்து நாட்டின் பாதுகாப்புச் சட்டங்களில் மாற்றங்களைக் கொண்டுவர இருப்பதாக தைவான் அதிபர் சாங் சான்-செங் கூறியுள்ளார். அந்தக் கட்டடத்தின் கட்டுமானத்தில் குறைபாடு இருந்ததாகக் கூறப்பட்டது. கடந்த மாதம் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற குடியரசு முன்னேற்றக் கட்சியைச் சேர்ந்த சாங் சான்=செங் தனது அவையின் பணிகளில் பேரிடர் தடுப்பை மேம்படுத்துவது முதலிடம் பிடிக்கும் என்று கூறியுள்ளார்.
நிலநடுக்கத்தைத் தாங்கக்கூடிய தரத்தில் கட்டடங்களின் வடிவமைப்பு மேம்படுத்தப்படுவது, கட்டடங்களைப் பார்வையிடும் அதிகாரிகளின் பொறுப்புகளை வலுப்படுத்துவது ஆகியவற்றுக்காக கட்டடச் சட்டத்தில் மாற்றம் செய்து அதனையும் பேரிடர் தொடர்பான வேறு இரண்டு சட்டங்களில் திருத்தம் செய்து அவற்றையும் அவையின் ஒப்புதலுக்கு அனுப்பவிருப்பதாகவும் அவர் கூறினார்.