கடந்தாண்டு கிறிஸ்மஸ் அன்று வெளியாகி வெற்றிபெற்ற படம் 'சார்லி'. இதில் துல்கர் சல்மான், பார்வதி, அபர்ணா கோபிநாத் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படத்தின் ரீமேக் உரிமைக்கு கடும் போட்டி எழுந்தது. இந்நிலையில், பிரபல பாலிவுட் நிறுவனமான பிரமோத் பிலிம்ஸ் என்ற நிறுவனம் இப்படத்தின் ரீமேக் உரிமை யைக் கைப்பற்றியுள்ளது. இப்படத்தில் நடிக்க விஜய் அல்லது சூர்யாவிடம் பேச்சுவார்த்தை தொடங்கும் எனக் கூறப்பட்டது. ஆனால் இப்போது சித்தார்த் - சிவகார்த்திகேயனிடம் பேச்சுவார்த்தை தொடங்கும் நிலையில் இருக்கிறது. இவர்களிடையே கடும் போட்டி இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இவர்களில் சித்தார்த்துக்கு அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், நாயகி வேடத்தில் பார்வதியே தமிழிலும் தொடருவார் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.