வாஷிங்டன்: அமெரிக்க துப்பாக்கித் தொழில்துறை, இளம் பிள்ளைகளை ஈர்க்கக்கூடிய வண்ணமயமான துப்பாக்கிகளை அறிமுகப்படுத்தி சிறுவர் அவற்றைப் பயன்படுத்துவதற்குப் பெற்றோரை ஊக்குவிப்பதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. அமெரிக்க துப்பாக்கித் தயாரிப்பாளர்கள் இளம் பிள்ளைகளை ஈர்க்கும் விளம்பர உத்திகளை நாடுவதாகத் துப்பாக்கி வன்முறையை நிறுத்தும் நோக்கில் செயல்படும் வன்முறைக் கொள்கை நிலையம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இளம் பிள்ளைகளிடையே துப்பாக்கிக் கலாசாரத்தை அதிகரிப்பதன் மூலம் துப்பாக்கி விற்பனையைக் கூட்டுவதுடன் எதிர்கால அரசியல் போராட்டங்களுக்கு அடுத்த தலை முறையினரைத் தயார்ப்படுத்து வதும் இந்தச் செயல்களின் நோக்கம் என அந்த நிலையம் குறிப்பிட்டது.
துப்பாக்கியின் பாகங்களை பிளாஸ்டிக்கால் செய்வதன் மூலம் அதனைக் கையாள்வதை எளிதாக்குவது, அதிக கனமில்லாத துப்பாக்கிகளை உருவாக்குவது இளஞ்சிவப்பு போன்ற கவர்ந்திழுக்கும் வண்ணங்களில் துப்பாக்கிகளை உருவாக்குவது போன்ற உத்திகளால் இளம் பிள்ளைகளைக் கவர துப்பாக்கி தயாரிப்பாளர்கள் முற்படுகின்ற னர். என்ஆர்ஏ எனும் நிறுவனம் ஆறு வயதிலிருந்தே பிள்ளைகள் துப்பாக்கிகளைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதாக அந்த அறிக்கை தெரிவித்தது. அமெரிக்காவில் நாள் ஒன்றுக்கு சராசரியாக ஏழு சிறுவர், இளையர் துப்பாக்கிச் சூட்டால் கொல்லப் படுவதாக புள்ளிவிவரம் ஒன்று தெரிவிக்கிறது.