ரூ.80 லட்சம் கொடுத்து ஏமாந்த இளைஞர்கள் காஞ்சிபுரம்: வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக 80 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்த இளை யர் குறித்து ஆந்திர இளைஞர்கள் போலிசில் புகார் செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல் பட்டு அடுத்த வீராபுரம் மகேந்திரா சிட்டி கட்டபெம்மன் தெரு பகுதி யில் விஷ்ணு பிரதீப் என்பவர் வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். அப்பகுதியில் உள்ள பன்னாட்டு தெழிற்சாலை களில் பணிபுரியும் ஆந்திர மாநில இளைஞர்களைத் தெடர்புகெண்ட அவர், வெளிநாட்டில் உள்ள நிறு வனம் ஒன்றில் ஒப்பந்த அடிப்படை யில் வேலை வாங்கித் தருவதாக அவர்களிடம் கூறியிருக்கிறார்.
வேலைக்குத் தேர்வு செய்யும் முன்னதாக ரூ.1 லட்சம் செலுத்த வேண்டும் என்றும் முன்பணமாக ரூ.80 ஆயிரம் வரை தருவதோடு பாஸ்போர்ட்டையும் ஒப்படைக்க வேண்டும் என விஷ்ணு பிரதீப் கூறினாராம். இதை நம்பி, ஆந்திராவைச் சேர்ந்த 92 இளைஞர்கள் கடந்த மாதம் ரூ.68 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரையிலான பணத்தையும் பாஸ்பேர்ட்டையும் விஷ்ணுவிடம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், பணத்தை பெற்றுக்கெண்ட விஷ்ணு, திடீரென தலைமறைவாகிவிட்ட தாக நேற்று முன்தினம் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப் பாளர் முத்தரசியிடம் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் புகார் மனு அளித் தனர். இப்புகார் குறித்து உடன டியாக விசாரணையில் இறங்கிய போலிசார் விஷ்ணுவைத் தீவிர மாகத் தேடி வருகின்றனர்.
வெளிநாட்டு வேலைக்கு ஆசைப்பட்டு பணத்தை இழந்த ஆந்திர இளைஞர்கள். (உள்படம்) தலைமறைவான விஷ்ணு பிரதீப். படங்கள்: இணையம்