நீண்டநாள் தொழிற்சங்கவாதியான 50 வயது கே.தனலட்சுமியை நியமன நாடாளுமன்ற உறுப்பினராக தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் முன்மொழிந்துள்ளது. தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையின் மூத்த துணை நிர்வாகியாகப் பணிபுரியும் இவர், தேசிய தொழிற்சங்க காங்கிரசின் மத்திய குழு, சுகாதாரப் பராமரிப்புச் சேவை ஊழியர்கள் சங்கம் ஆகியவற்றின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப் பினராக உள்ளார். வேலை மறுவடிவமைப்பு முயற்சிகளின் மூலம் சுகாதாரப் பராமரிப்புத் துறையில் சிங்கப்பூரர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கி நிர்வாக பங்காளிகளுடன் பணியாற்றுவதில் தனலட்சுமி முக்கிய பங்காற்றியுள்ளார் என்று அவரது வேட்புமனுவை ஆதரிக்கும் அறிக் கையில் என்டியுசி குறிப்பிட்டது.
நியமன நாடாளுமன்ற உறுப் பினராகத் தாம் தேர்வுபெற்றால் ஊழியர் நலன்களில் குறிப்பாக பெண்கள் நலன்களில் அக்கறை செலுத்துவேன் என்று கே.தனலட்சுமி குறிப்பிட்டார். "அனைவருக்கும் முக்கியமான விவகாரங்களான வேலைகள், வாழ்க்கைச் செலவினம் போன்ற வற்றில் தொடர்ந்து அக்கறை செலுத்துவேன். குறிப்பாக, பெண் கள் விவகாரங்களிலும் சுகாதாரப் பராமரிப்பை கட்டுப்படியானதாக ஆக்குவதற்கான மேம்பாடுகளிலும் சிறப்புக் கவனமும் முக்கியத்துவமும் செலுத்துவேன்," என்றார் அவர்.