சுனைனா இப்போது 'கவலை வேண்டாம்' படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் ஜீவா, பாபி சிம்ஹா கதாநாயகன்களாவும் சுனைனா, காஜல் அகர்வால் கதாநாயகிகளாகவும் நடித்து வருகிறார்கள். இந்தப் படத்தில் சுனைனா ஒருதலையாக ஜீவாவைக் காதலிப்பதாகவும் ஆனால் ஜீவாவுக்கு காஜல் அகர்வால் மீதுதான் காதல் என்றும் ஜீவாவை தன் பக்கம் இழுக்க சுனைனா செய்யும் முயற்சிகளும் அந்த முயற்சிகளில் இருந்து ஜீவா தப்பிக்கும் விதமும்தான் இந்தப் படத்தின் கதை என்று கூறப்படுகிறது.
படத்தில் சுனைனா அமைதியான மற்றும் அப்பாவிப் பெண்ணாகவும் காஜல் அகர்வால் நாகரிகப் பெண்ணாகவும் நடிக்கிறார்கள். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு குன்னூரில் நடந்து வருகிறது.