ஈரோடு: மக்களை ஏமாற்றவே தேர்தல் கருத்துக் கணிப்புகள் வெளி யிடப்படுவதாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் குற்றம்சாட்டி உள்ளார். ஈரோட்டில் நேற்று முன்தினம் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், தமிழகத்தில் அனைத்துத் தரப்பினரும் இப்போது அரசுக்கு எதிராகப் போராட்டங்களை நடத்தி வருவதாகக் கூறினார்.
திமுக=காங்கிரஸ் கூட்டணி குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், அது பலவீனமான கூட்டணி என்றும் பலவீனமானவர்கள் ஒன்றாகச் சேர்ந்துள்ளதைக் காட்டுவதாகவும் தெரிவித்தார். "அரசு ஊழியர்கள், ஆசிரியர் கள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் பல்வேறு வாக்குறு திகளை அளித்தது அதிமுக அரசு. ஆனால் அவற்றில் எதை யுமே நிறைவேற்றவில்லை. இதன் மூலம் ஜெயலலிதா தலைமையிலான அரசு மக்களை ஏமாற்றிவிட்டது," என்று ராமதாஸ் சாடினார்.