புக்கிட் பாத்தோக் கால்வாயில் பொதுப் பயனீட்டுக் கழகத்தின் துடிப்பான, அழகான, தெளிந்த நீர்நிலையை நேற்று சுற்றுப்புற, நீர்வள அமைச்சின் மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஏமி கோர் அதிகாரபூர்வமாக திறந்து வைத்தார். இதன்முலம் புக்கிட் பாத்தோக் குடியிருப்பாளர்கள் நீர்நிலை ஓரங்களில் அழகிய ஓவியங்கள், அங்கு அமர்ந்து இயற்கையை ரசிக்க மர இருக்கைகள் ஆகியவற்றுடன் கண்ணுக்குக் குளிர்ச்சி தரும் நீர்த்தோட்டங்கள் போன்ற வற்றை தங்களுக்கு அருகாமையிலேயே பெற்றுள்ளனர். புக்கிட் பாத்தோக் வெஸ்ட் அவென்யூ 2, 4 வழியே செல்லும் இந்த 230 மீட்டர் நீளக் கால் வாய்க்கு புத்துயிரூட்டப்பட்டுள் ளது. வெறும் நீர்நிலையாக மட்டுமே இருந்த இந்தக் கால்வாய் தற்பொழுது அதன் சுவர்களில் அழகிய பூக்கள், செடிகளைத் தாங்கி வருகின்றது.
அத்துடன், மழை நீரை வடிகட்டிய நிலையில் கால்வாய்க்குள் செல்லும் விதமாக நான்கு நீர்த் தோட்டங்கள் இங்கு அமைந்திருப்பது கண்ணுக்குக் குளிர்ச்சியாக வும் உள்ளது. இந்த நீர்நிலைக்கு புதிய எழில் தோற்றம் கொடுக்கும் விதத்திலும் நண்பர்கள், அக்கம்பக்கத்தார் உட்கார்ந்து அளவளாவவும் இங்கு மரத்தினாலான இருக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இதுபற்றிக் கூறும் பொதுப் பயனீட்டுக்கழகத்தின் தலைமை மீள்திறன் அதிகாரியான டான் ஙுவான் சென், "குடியிருப்புப் பகுதியின் மையத்தில் உள்ள புக்கிட் பாத்தோக் கால்வாய் கிராஞ்சி நீர்த்தேக்கத்திற்கு நீரைக் கொண்டு செல்லும் கால்வாய் மட்டுமல்ல. இந்த நீர்நிலையை நாங்கள் சீர்படுத்தி துடிப்பான, அழகான, தெளிந்த நீர்நிலையின் பலன்களை இங்குள்ள குடியிருப்பாளர்கள் அனுபவிக்கும் விதத்தில் இதை புனரமைப்பு செய்திருக் கிறோம். "இங்குள்ளவர்கள் இங்கு ஒன்றுகூடி இந்த நீர்நிலையின் எழிலைக் கண்டுகளிக்கும் அதேநேரத்தில் இதன் மதிப்பை உணர்ந்து நீர்நிலைகளை குப்பை களில்லாமல் சுத்தமாக வைத் திருக்க உதவுவார்கள் என்று நம்பிக்கையுடன் இருக்கிறோம்," என்றார்.