ஹரி இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் 'எஸ் 3'. இப்படம் 'சிங்கம் 1', 'சிங்கம் 2' ஆகிய படங்களின் தொடர்ச்சி யாக உருவாகிறது. இதில் சூர்யா மீண்டும் காவல் துறை அதிகாரியாக வருகிறார். அனைத்துலகக் குற்றவாளி களைத் தேடிக் கண்டுபிடிக்கும் பணியில் அவர் என்னென்ன சாதித்தார் என்பதுதான் கதையாம். இந்தப் படத்தில் சூர்யாவுடன், சுருதிஹாசன், சூரி, பாடகர் கிரிஷ், ரோபோ சங்கர், சாம்ஸ் உள்ளிட்ட பலர் நடித்து வருகி றார்கள்.
ஆனால், முதல் இரண்டு பாகங்களிலும் சூர்யாவுடன் நடித்த விவேக், இரண்டாம் பாகத் தில் நடித்த சந்தானம் ஆகியோர் இப்படத்தில் இடம் பெறவில்லை.
முதல் இரண்டு பாகங்களில் சூர்யாவுடன் இணைந்து விவேக் கும் போலிசாக நடித்திருந்தார். அவரது நகைச்சுவைக்குப் பெரும் வரவேற்பு கிடைத்தது. சூர்யாவும் விவேக் நடிப்பை வெகுவாகப் பாராட்டி இருந்தார்.
'சிங்கம்' முதல் பாகத்தில் சூர்யா, அனுஷ்கா.