சிங்கப்பூரில் பிறந்து, இங்கு வளர்ந்தும் 32 வயது குமாரி யுவேத்ரா செல்வநாயகம் என் பவருக்கு சிங்கப்பூர் குடியுரிமை இல்லை. இவர் சிங்கப்பூரின் அன்றைய கண்டாங் கிர்பாவ் மருத்துவ மனையில் பிறந்தவர். பள்ளி நாட்களில் தேசிய பற்றுறு-தியை வாசித்து சிங்கப்பூர் தேசிய கீதத்தை பாடியவரின் அடையாள அட்டையில் அவர் நாடற்றவர், அதாவது 'ஸ்டேட்லஸ்', என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவருடைய தாயாரான திருமதி செல்வராணி ராம்பிரசாத் என்ற 51 வயது மாது சிங்கப்பூர் மலேசிய கூட்டரசில் சேர்ந்து பின்னர் பிரிந்த 1963லிருந்து 1965ஆம் காலகட்டத்தில் பிறந்த தால் அவரும் நாடற்றவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளார்.
இவர் தமது கணவரைக் கரம் பற்றியபோது இவரது பெற்றோர் மரணமடைந்து விட்டனர். அப் பொழுது இவரது ஒரே மூத்த சகோதரருக்கு 21 வயது ஆகாத தால் அவரால் செல்வராணியின் திருமண சான்றிதழில் கையெ ழுத்திட முடியாத நிலை. இதனால் இவர் தமது முறை யான திருமணச் சான்றிதழைப் பெற 1988 வரை காத்திருக்க வேண்டியிருந்தது. இந்த நிலையில் இதற்கு முன் னால் பிறந்த குமாரி யுவேத்ரா வும் அவருடைய இரு சகோதரர் களும் யுவேத்ராவைப் போலவே நாடற்றவர்கள் என்று குறிப்பிடப் பட்டுள்ளனர். திருமதி செல்வராணி தமது திருமணச் சான்றிதழ் பெற்ற பின் பிறந்த மற்ற மூன்று பிள்ளைகள் மட்டும் சிங்கப்பூர் குடிமக்கள் என அவர்களது அடையாள அட்டைகள் குறிப்பிடு கின்றன.