நாகர்கோவில்: அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார். நாகர்கோவிலில் செய்தி யாளர்களிடம் பேசிய அவர், அதிமுக தலைமை தன்னை கறிவேப்பிலையைப் போன்று பயன்படுத்திக் கொண்டது என குற்றம்சாட்டி உள்ளார். நேற்று முன்தினம் கூட அதிமுக கூட்டணியில் நீடிக்க விரும்புவதாகவும் 234 தொகுதிகளிலும் அக்கட்சி தனித்துப் போட்டி யிடுவதாக தகவல் வெளியா னதாலேயே தாமும் கூட்டணி குறித்து முடிவெடுக்க வேண் டிய கட்டாயத்துக்கு ஆட்பட் டுள்ளதாக சரத்குமார் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சமத்துவ மக்கள் கட்சியின் செயல்வீரர் கள் கூட்டம் நேற்று நாகர் கோவிலில் நடைபெற்றது. இதில் பேசிய சரத்குமார் வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி கிடையாது என திட்டவட்டமாக அறிவித்தார். "அதிமுக தலைமை கூட் டணி தர்மத்தை கடைப்பிடிக்க வில்லை. என்னை அக்கட்சி கறிவேப்பிலை போன்று பயன்படுத்திக் கொண்டது. தேர்தலில் அதிக இடங்கள் அளித்தாலும் சரி, இனி அதிமுகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடம் இல்லை," என்றார் சரத்குமார்.