சிரியாவில் தாக்குதலை நிபந்தனையுடன் நிறுத்த தான் தயார் என்று சிரியாவின் அதிபர் பஷார் அல் அசாத் தெரிவித்த வேளையில், அரசாங்கக் கட்டுப்பாட்டில் உள்ள ஹோம்ஸ் என்ற நகரில் நேற்று இரண்டு கார்களில் வைக்கப்பட்ட குண்டுகள் வெடித்ததில் 46 பேர் கொல்லப்பட்டனர். சுமார் 100 பேர் காயமடைந்து கிடப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த ஐந்து ஆண்டுகளில் இத்தகைய பயங்கர தாக்குதல் நிகழ்ந்து இருப்பது இது 2வது தடவை என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சிரியாவின் ராணுவப் படை வீரர்களும் குடிமக்களும் இரட்டை கார் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்த இடத்தைச் சோதிக்கிறார்கள். அரசாங்கக் கட்டுப்பாட்டில் இருக்கும் ஹோம்ஸ் நகரில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. இந்தப் படத்தை சானா நிறுவனம் கொடுத்தது. படம்: ராய்ட்டரஸ்