‘கவிமாலை’யின் மாணவர்கள் கவிதைப் பயிலரங்கு

இளையர்களிடம் கவிதை வழி தமிழ் ஆர்வத்தை வளர்க்கும் நோக்கில் கவிமாலை அமைப்பு 13.02.2016 அன்று காலை தேசிய நூலகத்தில் மாணவர்களுக்குக் கவிதை எழுதுவது குறித்த பயிலரங்கை நடத்தியது. பயிலரங்கில் பல்வேறு பள்ளிகளிலிருந்து பெற்றோர், ஆசிரியர்களுடன் சுமார் அறுபது மாணவர்கள் கலந்துகொண்டனர். கவிமாலைக் காப்பாளர் மா. அன்பழகன் வரவேற்று நிகழ்ச்சி பற்றிய விளக்கத்தை அளித்தார். தமிழாசிரியர் முனைவர் இராஜகோபால், கவிஞர்கள் மதிக்குமார், கோ.இளங்கோவன் ஆகியோர் மாணவர்களுக்குக் கவிதை எழுதும் பயிற்சிகளை வழங்கினர். தொடர்ந்து அழகு, அன்பு, மழை ஆகிய தலைப்புகளில் மாணவர்களுக்குக் கவிதை எழுதும் போட்டி நடத்தப்பட்டது. மாணவர்கள் ஆர்வத்துடன் கவிதைகளை எழுதினர்.

இப்போட்டியில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு வருகின்ற ஏப்ரல் மாதத்தில் நடைபெறவுள்ள தமிழ்மொழி மாதத்தின் நிறைவு விழாவில் பரிசுகள் வழங்கப்படும். முதற்பரிசு இருவருக்கு தலா $500, இரண்டாவது பரிசு இரு வருக்கு தலா $300, மூன்றாம் பரிசு இருவருக்குத் தலா $200, 10 மாணவர்களுக்கு ஊக்கத் தொகையாக தலா $100ம் வழங்கப்படும். படத்தில் கவிதைப் பயிலரங்கில் பங்கேற்ற மாணவர்கள். படம்: கவிமாலை

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!