சிங்கப்பூர் தொழில்நுட்ப, வடிவமைப்புப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 75% மாணவர்கள் அடுத்த ஆண்டுக்குள் மாணவர் பரிமாற்றம், கோடைக்காலப் பாடத்திட்டம், நிறுவன உள்ளகப் பயிற்சி ஆகியவற்றின்கீழ் வெளிநாடுகளில் உள்ள பல்கலைக் கழகங்களில் பயில்வதற்கான வாய்ப்புகளைப் பெறுவர். ஒன்பது பல்கலைக்கழகங்கள், அமைப்புகளுடன் புதிய பங்காளித்துவத்தை ஏற்படுத்துவதன் மூலம் மாணவர்களுக்கான இத்தகைய அனைத்துலக வாய்ப்புகள் எதிர்வரும் மே மாதம் முதல் 40 விழுக்காடு வரை உயரவிருப்பதாகப் பல்கலைக்கழகம் நேற்று அறிவித்தது.
சுவீடனில் உள்ள கேடிஎச் ராயல் தொழில்நுட்ப கல்விக்கழகம், அமெரிக்காவின் ஸ்டான் ஃபோர்ட் பல்கலைக்கழகம், பிரான்சு அல்லது இத்தாலியில் உள்ள ஐரோப்பிய புத்தாக்க கல்வி நிலையம் ஆகிய கல்வி நிறுவனங்கள் புதிய பங்காளித்துவத்தில் பங்கேற்கும். இவற்றில் சில திட்டங்கள் பொறியியல் வடிவமைப்பு, தொழில்முனைப்பு ஆகிய துறைகளில் கவனம் செலுத்தும்.