கௌரி சந்திரா
திறன்மிகு தேசமாக உருவெடுக்கும் சிங்கப்பூரில் தகவல் தொழில்நுட்பத் துறையைச் சார்ந்த வேலை வாய்ப்புகள் பெருகி வருகின்றன. தரவுகளைத் திரட்டி, தகவல்களை ஆராய்ந்து தக்க முடிவுகளை எடுக்க வழிகாட்டும் தரவு ஆய்வாளர் (Data Strategist) பணி தற்போது நிறுவனங்களின் முன்னேற்றத்தில் பெரும்பங்கு வகிக்கிறது. தகவல் தொழில்நுட்பத் துறை தவிர வேறு துறைகளில் பட்டம்பெற்றவர்களும் தரவு ஆய்வாளராகப் பணியேற்கலாம். தத்துவம், அரசியல், பொருளியல் துறையில் பட்டம் பெற்ற திரு விக்நன் பன்னீர்செல்வம், 28, இப்போது 'டிபிடபுள்யூஏ' குழும நிறுவனத்தின் அனைத் துலக விளம்பர நிர்வாகத்துறை யில் தரவு ஆய்வாளராகப் பணி புரிகிறார்.
தொடக்கப்பள்ளி மாணவனாக இருந்தபோதே அடிப்படைக் கணினி நிரலாக்கத்தில் ஆர்வம் கொண்டார் திரு விக்நன். இருந்தாலும், அவரது கல்விப் பாதை அதை விட்டு சற்று விலகியே அமைந்தது. தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் தகவல்தொடர்பு, ஊடக நிர்வாகத்தில் பட்டயம் பெற்றார். அதன் பிறகு யோர்க் பல்கலைக் கழகத்தில் தத்துவம், அரசியல், பொருளியல் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.