எது குறித்தும் விவாதிக்க அரசு தயார்: வெங்கையா நாயுடு அறிவிப்பு

புதுடெல்லி: நேரு பல்கலை, ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக விவகாரங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க தயார் என மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். எது குறித்து வேண்டுமானாலும் அவையில் பேச அரசு தயாராக இருக்கிறது என்றார் வெங்கையா நாயுடு. நேரு பல்கலைக்கழகத்தை மூடும் திட்டம் அரசுக்கு இல்லை என்று குறிப்பிட்ட அவர், இதுகுறித்து சிலர் தவறாக பிரசாரம் செய்வதாகச் சாடினார். இதற்கிடையே தேசத்துரோக செயல்களில் ஈடு பட்டு வரும் தனது மகளைச் சுட்டுக் கொல்ல கம்யூனிஸ்டுகளுக்கு டி.ராஜா உத்தரவிட வேண்டும் என பாஜக தேசிய செயலர் எச்.ராஜா கூறியதற்குப் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

"கம்யூனிஸ்டுகள் தங்களை தேச பக்தர்கள் எனக் கூறிக்கொள்கிறார்கள். டி.ராஜாவின் மகளோ தேச விரோத போராட்டங்களில் ஈடுபட்டுள்ளார். எனவே தனது தேச பக்தியை நிரூபிக்க ராஜா தனது மகளைச் சுட்டுக் கொல்ல உத்தரவிடட்டும்," என எச்.ராஜா கூறியுள்ளார். நேரு பல்கலைக்கழக விவகாரம் தொடர்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!