மருத்துவச் செலவுகள், அதன் தொடர்பிலான உயர்ந்த காப்புறுதிச் செலவுகளைத் தவிர்க்கும் வகையில் மருத்துவம் தொடர்பான வழக்குகளில் புதிய திட்டங்களை தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் நேற்று அறிவித்தார். 2016 சட்ட ஆண்டை நேற்றுக் காலை தொடங்கி வைத்து உரை யாற்றிய திரு சுந்தரேஷ், தற்போது உள்ள நடைமுறைகளுக்கு மாற்றாக மூன்று புதிய நடைமுறைகள் பற்றி பேசினார்.
சர்ச்சைகளுக்குத் தீர்வுகாண சமரசப் பேச்சுவார்த்தையை முதற்படியாகப் பயன்படுத்துதல்; மருத் துவம் தொடர்பான வழக்குகளில் நீதிபதியின் ஆலோசனை கேட்டுச் செயல்படுதல்; மருத்துவத் துறை மதிப்பீட்டாளர்களுடைய ஆலோசனையின் உதவியுடன் நீதிபதி தீர்ப்பளித்தல் ஆகியவையே அந்த மூன்று திட்டங்கள். இதற்காக, சிங்கப்பூர் மருத்துவமன்றத்தால் நியமிக்கப்படும் மூத்த மருத்துவர்களைக் கொண்ட மருத்துவத்துறை மதிப்பீட்டாளர்கள் குழு அமைக்கப்படும்.
மேலும், உயர் நீதிமன்றத்திலும் அரசு நீதிமன்றங்களிலும் இது போன்ற வழக்குகளைக்கையாள சிறப்பு நீதிபதிகள் குழு உருவாக்கப்படும். இதன் தொடர்பில் சிங்கப்பூர் நீதித்துறை கல்லூரி, சிங்கப்பூர் மருத்துவமன்றத்துடன் இணைந்து நீதிபதிகளுக்கும் மதிப்பீட்டாளர்களுக்கும் தகுந்த பயிற்சியை அளிக்கும்.