ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தியையொட்டி தீவெங்கிலுமுள்ள பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன:
ஸ்ரீ ருத்ர காளியம்மன் கோயிலில், 36ஆம் ஆண்டு வருடாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று துவங்கி வரும் 4ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு ஸ்ரீ ருத்ர காளியம்மனுக்கு சிறப்பு யாகம் நடைபெறும். இன்று காலை 8 மணிக்கும் மாலை 6 மணிக்கு யாகசாலை வழிபாடுகள் நடைபெறும்.
ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று காலை 7.30 மணிக்கு சங்கல்பத்தைத் தொடர்ந்து வழிபாடுகளும் 10.30 மணிக்கு பால்குட அபிஷேகமும் நடைபெறும். இரவு 7.30 மணி முதல் வரிசை எடுத்தல், விநாயகர் புறப்பாடு நடைபெறும்.
பொத்தோங் பாசிர் ஸ்ரீ சிவதுர்க்கா ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று காலை 8.30 மணிக்கு விநாயகர் பூஜை, 108 சங்கு பூஜைகளைத் தொடர்ந்து குளத்து விநாயகருக்குப் பக்தர்கள் தங்கள் கைகளால் பால் அபிஷேகம் செய்யலாம்.