இந்து அறக்கட்டளை வாரியத்தின் ஆதரவுடன் திருமலை திருப்பதி தேவஸ்தானமும் சிங்கப்பூர் தெலுங்கு சமாஜமும் இணைந்து ஸ்ரீ ஸ்ரீநிவாச திருக்கல்யாண மகோற்சவத்தை இம்மாதம் 12ஆம், 13ஆம் தேதிகளில் நடத்தவிருக்கின்றன. கேலாங் ஈஸ்ட் அவென்யூ 2ல் உள்ள ஸ்ரீ சிவன் கோயிலுக்கு எதிர்ப்புறத்தில் அமைக்கப்பட்டுள்ள கூடாரத்தில் நடைபெறும் இந்த வைபவத்தின் மூலம் சிங்கப்பூர் இந்துக்கள் திருமலை திருப்பதி ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாளைத் தரிசிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
தனது ஆலயத்தைச் சுற்றியுள்ள வீதிகளில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் வலம் வந்த ஸ்ரீ வெங்கடேஸ்வரப் பெருமாள், புரட்டாசி சனிக்கிழமையன்று சிங்கப்பூர் மக்களுக்கு அருள்பாலிக்க வருகிறார் என்றும் 12 ஆண்டுகளுக்குப் பிறகு திருமலை திருப்பதி பெருமாள் சிங்கப்பூர் வருகிறார் என்றும் சிங்கப்பூர் தெலுங்கு சமாஜம் கூறுகிறது.
திருமலை கோயிலிலிருந்து அர்ச்சகர்கள், வேதப் பண்டிதர்கள் வருவதுடன் லட்டு, வடை பிரசாதமும் திருமலையில் இருந்து கொண்டுவரப்படுகின்றன.
திருக்கல்யாண மகோற்சவம் உட்பட எல்லா பூஜைகளுக்கும் www.sts.org.sg எனும் இணையப் பக்கத்தில் பதிந்துகொள்ளலாம்.
அன்னதான நன்கொடைகளுக்கு 98753447, 83323427, 93264299, 90210664 ஆகிய எண்களை அழைக்கலாம் அல்லது https://bit.ly/SSVKREG19 எனும் இணையப் பக்கத்தை நாடலாம்.