ஈரான் என்றாலே மிரட்டல், பூசல் என பலர் உடனே நினைக்க ஆரம்பிக்கின்றனர். அந்நாட்டுக்குரிய அழகிய அம்சங்கள் பற்றி அதிகம் பேசப்படுவதில்லை. தென் ஈரானிலுள்ள நாசிர் அல்-மொல்க் பள்ளிவாசல். அந்நாட்டிலுள்ள இத்தகைய அதிசயங்களில் ஒன்று.
இளஞ்சிவப்பு நிற தரை கற்கள் பொருத்தப்பட்டிருப்பதால் இளஞ்சிவப்பு பள்ளிவாசல் என அழைக்கப்படும் ‘அல்-மொல்க்’, 19ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.
இஸ்லாமிய சமய கோட்பாடுகளின்படி மனித, மிருகச் சிற்பங்கள் பள்ளிவாசல்களில் வரையப்படமாட்டா. பள்ளிவாசலை வடிவமைக்கும் கலைஞர்கள் சமய விதிகளுக்கு உட்பட்டே அனைவரையும் மலைக்க வைக்கும் வேலைப்பாடுகளைப் பதித்து வைத்துள்ளனர்.
நாசிர் அல்-மொல்க் பள்ளிவாசலின் பலவண்ண கண்ணாடிச் சன்னல்கள், கண்களுக்கு மிகவும் ரமியமாக இருப்பவை. அத்துடன், மிக மென்மையான பாரசீக தரை விரிப்புகளும் இதில் உள்ளன.
பழம்பெரும் ஈரானிய வடிவமைப்பாளர் முகம்மது ஹசான்-இ-மேமார், கட்டடக் கலைஞர் முகம்மத்ரேஸா கசிஸஷ் ஷிராஸி ஆகியோரின் துணையுடன் மிர்ஸா ஹசான் அலி என்ற பெருவணிகர் இந்தப் பள்ளிவாசலைக் கட்டி முடித்தார்.