ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது.
அக்கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் நடக்க உள்ளது. இதனால் வருகிற 7, 8, 9, 10ஆம் தேதிக்கான ரூ.300 நுழைவுச்சீட்டுகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ரூ.300 நுழைவுச்சீட்டுகள் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி அளவில் திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையத்தளத்தில் வெளியிடப்பட உள்ளது.
எனவே பக்தர்கள் ரூ.300 நுழைவுச்சீட்டுகள் முன்பதிவு செய்து குறிப்பிட்ட நாளில் திருமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்யலாம். மேலும் வருகிற 9 மற்றும் 10ஆம் தேதிகளில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சாமி தரிசனமும் ரத்து செய்யப்பட்டுள்ளது என திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.