ஜூரோங் பறவை பூங்கா 1971ல் திறக்கப்பட்டது. அது முதல் 40 மில்லியனுக்கும் அதிக பார்வையாளர்களை அது கவர்ந்து ஈர்த்து இருக்கிறது.
அந்தப் பறவை பூங்கா மூடப்படவிருப்பதாக கடந்த ஆகஸ்ட்டில் அறிவிக்கப்பட்டது.
அது முதல் அந்தப் பூங்காவுக்கு வந்து செல்வோரின் எண்ணிக்கை ஏறத்தாழ இரண்டு மடங்காகிவிட்டதாக அதை நிர்வகித்து நடத்தும் மண்டாய் வனவிலங்குக் குழுமம் தெரிவித்துள்ளது.
எல்லாவற்றுக்கும் உச்சமாக டிசம்பர் 26ஆம் தேதியன்று ஒரே நாளில் அந்தப் பூங்காவிற்கு 8,000 பேர் வந்து சென்றனர்.
இது அன்றாட சராசரி எண்ணிக்கையைப் போல நான்கு மடங்காகும் என்பது குறிப்பிடத்தக்கது.
பூங்கா ஜனவரி 3ஆம் தேதி மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து நவம்பர் 19 முதல் ஜனவரி 3 முதல் நுழைவுச் சீட்டு வெறும் 10 வெள்ளிக்கு விற்கப்படுகிறது.
அந்தப் பூங்கா மூடப்பட்ட பிறகு அது மண்டாய் வனவிலங்கு காப்பகத்தில் அமையவுள்ள பறவைப் பூங்காவிற்கு இடம் மாறும்.
பூங்காவின் சுமார் 130 ஊழியர்களும் ஏறக்குறைய 3,500 பறவைகளும் புதிய இடத்திற்குச் செல்ல ஆயத்தமாகி வருகிறார்கள்.