மரின் பரேட் குழுத்தொகுதியில் மன்ற நாயகர் டான் சுவான்-ஜின் தலைமையிலான மக்கள் செயல் கட்சிக் குழு களமிறங்கி உள்ளது.
ஓய்வுபெற்ற கௌரவ மூத்த அமைச்சரான திரு கோ சோக் டோங் இல்லாமல் மசெக இங்கு களமிறங்குவது இது முதல்முறை. திரு கோ அரசியலில் இருந்து ஓய்வுபெறுகிறார்.
டான் சுவான்-ஜின், 51, சீ கியாங் பெங், 58, எட்வின் டோங், 50, ஆகியோர் மீண்டும் தேர்தல் களம் காணும் அதேவேளை, முகம்மது ஃபாஹ்மி அலிமான், 48, டாக்டர் டான் சீ லெங், 55, ஆகிய இரு புதுமுகங்களும் இத்தொகுதிக்கான மசெக அணியில் உள்ளனர்.
மசெக அணிக்கு எதிராக இத்தொகுதியில் பாட்டாளிக் கட்சியின் ஐவர் குழு களமிறங்கி உள்ளது.
கடந்த தேர்தலில் நீ சூன் குழுத் தொகுதியில் போட்டியிட்ட ரோன் டான் ஜுன் யென், 35, இக்குழுவுக்குத் தலைமை ஏற்கிறார். முன்னாள் தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினரான யீ ஜென் ஜோங், 55, அணியில் உள்ளார்.
இவ்விருவர் தவிர, மற்ற மூவரும் புதுமுகங்கள். வழக்கறிஞர் முகம்மது ஃபாட்லி முகம்மது ஃபாவ்ஸி, 40, கணினித் துறை நிபுணர் நேதனியல் கோ, 36, சிறு வர்த்தக நிறுவனத்தின் உரிமையாளர் முகம்மது அஸார் அப்துல் லத்திஃப், 34, ஆகியோர் அவர்கள்.