பொருள், சேவை வரி (ஜிஎஸ்டி) உயர்வு அறிவிப்பைத் திரும்பப் பெறுதல், ஆள்குறைப்பு செய்யப்பட்ட ஊழியர்கள் அல்லது தேவை இருப்போர் தங்களது மத்திய சேம நிதிக் கணக்கில் தற்காலிகமாக பணம் எடுக்க அனுமதி உள்ளிட்ட கோரிக்கைகள், தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சி தமது ஃபேஸ்புக் பக்கத்தில் நேற்று (ஜூன் 30) பதிவேற்றிய தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
2022-2025 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் ஜிஎஸ்டி 7 விழுக்காட்டில் இருந்து 9 விழுக்காடாக உயர்த்தப்படும் என அரசாங்கம் ஏற்கெனவே அறிவித்து இருக்கிறது. அதனைக் கைவிட்டு, வருவாய் ஈட்ட வேறு வழிகளை அரசாங்கம் தேட வேண்டும் என தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சி வலியுறுத்தி இருக்கிறது.
பாட்டாளிக் கட்சி, சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி, சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி, சிங்கப்பூர் மக்கள் கட்சி ஆகியவையும் இதேபோன்று குரல் எழுப்பியுள்ளன.
ஆள்குறைப்பு காரணமாக வேலையிழந்த உறுப்பினர்களைக் கொண்டுள்ள குடும்பங்கள் அல்லது நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள குடும்பங்கள் தங்களது மசே நிதி கணக்கில் இருந்து ஆறு மாத காலத்திற்கு மாதந்தோறும் $3,000 வரை எடுத்துக்கொள்ள அனுமதியளிக்க வேண்டும் என்று தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online